Friday, September 18, 2009

எனது படைப்பு,

ஒரு பொழுதெனும் வேண்டும்

ஒவ்வொரு இரவிலும் எனை துரத்தும்
கனவாய் நீ
ஒவ்வொரு விடியலிலும் உன் முகம்
தேடி விழிக்கின்றென்

என் எல்லா பயணங்களின்
முடிவிலும் நீ
எங்கு உள்ளயொ? எனை
என்று மீட்டு எடுப்பாயொ?

என்றும் உன் நினைவுகள்
முடிவில்லா நீட்சியாய்

ஒரு பொழுதெனும் வேண்டும்- உன்னுடன்
கணையாழி முதல் காற்சிலம்பு வரை
அத்தனையும் வேண்டும்
அணு அணுவாய் வேண்டும்

யாருமில்லா அத்துவான வீதியில்
ஓசைகள் அனைத்தும் ஊமையான பொழுதில்
உன்னுடன் இருக்கும் ஒரு பொழுதிற்காக
உண்மையில் ஏங்குகிறென் ஒவ்வொரு நாளும்

அந்த ஒரு பொழுதிற்காக
யுகம் யுகமாய்
தொடர்கிறது என் பயணம்

No comments:

Post a Comment